கழிவுநீர், மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்

Update: 2022-09-14 12:04 GMT

வாணியம்பாடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் கால்வாய் மீது ஒரு பகுதி கட்டப்பட்டுள்ளதால், அந்த பகுதியின் வழியே செல்ல வேண்டிய மழைநீர், கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இங்கு செல்ல வேண்டும் என்றால் கார், ஜீப் போன்ற வாகனத்தில் மட்டுமே செல்லும்படி உள்ளது‌. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர், கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகேந்திரன், வளையாம்பட்டு.

மேலும் செய்திகள்