கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2023-11-19 16:39 GMT

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கழிவுநீர் கால்வாய் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், கழிவுநீரை வெளியேற வழி இல்லாமல் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணியை வரைந்து முடிக்க வேண்டும். தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

-சுப்பிரமணியம், சோமசமுத்திரம். 

மேலும் செய்திகள்