கிடப்பில் போட்ட கால்வாய் பணி

Update: 2022-12-18 12:37 GMT

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையான ஜமாத் ரோடு ஓரம் கால்வாய்க்காக வெட்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கால்வாய் கட்டப்படுமா? இல்லை தோண்டப்பட்ட குழிகள் அப்படியே இருக்குமா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கால்வாய் கட்ட நிதி ஒதுக்கியும் இன்னும் கால்வாய் கட்டி முடிக்காமல் கிடப்பில் போட்டதால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் பணியை உடனே செய்து முடிக்க வேண்டும்.

-ராஜா, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்