மழைநீர் வெளிேயற கால்வாய் வசதி தேவை

Update: 2023-03-22 16:37 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசலில் பஜார் வீதியில் இருந்து வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில், சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் வெளியேற வழியில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி ஊராட்சி சார்பில் பல ஆண்டுகளாக செய்யாதது ஏன்? எனத் தெரியவில்லை. தெருவை விட பஜார் சாலை உயரமாக உள்ளதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், சந்தவாசல்.

மேலும் செய்திகள்