கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பெயர் பலகை

Update: 2022-09-22 11:07 GMT

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகை வீசப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தடைபடுகிறது. தினமும் அரசு அதிகாரிகள் செல்லக்கூடிய ஒரு சாலையில் இவ்வாறு பெயர்ப்பலகை கழிவுநீர் கால்வாயில் கிடப்பதை இதுவரை யாரும் பார்க்கவில்லையா? இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருவேங்கடம், ஆற்காடு. 

மேலும் செய்திகள்