ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-07 16:59 GMT

திருச்சி மாவட்டம், திருச்சி மாநகராட்சி, நகராட்சி, மாரிஸ் அவென்யூநகர், பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், அண்ணா வளைவு, துவாக்குடி ஏழில் நகர், வ.வு.சி.நகர், அய்யம்பட்டி ஆகிய நகரங்களில் இருந்து வரும் கழிவுநீர் உய்யக்கொண்டான் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைகிறது. இதனால் இந்த ஆற்றில் ஒரு சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது.  உய்யக்கொண்டான் ஆற்றை கொண்டு பல லட்சம் ஏக்கர் விவாசாய நிலங்கள் பயனடைகிறது. இந்த நிலையில் கழிவுநீர் கலப்பதால் நிலங்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்