கண்மாயில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-21 14:19 GMT

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதோடு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதன் எதிரே தான் பள்ளியும் உள்ளது. மேலும் பிரதான சாலையிலேயே குப்பைகளும் அகற்றப்படாமல் கிடப்பதால் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு கண்மாயில் கழிவுநீர் கலக்காத வண்ணம் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்