சுரங்கபாதையை சூழ்ந்த கழிவுநீர்

Update: 2022-03-25 10:20 GMT
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் அதிகளவு தேங்கியபடி காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் சுரங்கப்பாதையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலையுள்ளது. தேங்கியிருக்கும் கழிவுநீரில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தடுமாறி விழவும் வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்