ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரில் நடப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரில் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.