தாமதமாக நடைபெறும் வடிகால் பணி

Update: 2022-08-05 14:13 GMT

கரூர் மாவட்டம், தெற்கு முருகானந்தபுரம் ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்க நீண்ட நாட்களாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நடைபெறும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்