புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சிதம்பரம் கார்டன் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது ஊரின் மையப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கார்டன் பகுதிக்குள் புகுந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து வருதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.