வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அவசியம்

Update: 2023-09-17 17:07 GMT

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ்புறம் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பு சாலையோரம் வாறுகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. எனவே ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் வாறுகாலின் மீது மரப்பலகையாலான நடைமேடை அமைக்கப்பட்டது. அந்த பலகை சேதமடைந்ததால் ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வாறுகால் பணிகளை விரைந்து நிறைவேற்றி, அவற்றின் மீது கான்கிரீட் மூடி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்