கழிவறை பராமரிக்கப்படுமா?

Update: 2023-09-17 11:40 GMT


நாகை நல்லியான் தோட்டத்தில் நகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிவறை பராமரிப்பு இல்லாமல் கிடைக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிவறையை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்