நோய் தொற்று அபாயம்

Update: 2023-09-10 11:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சிலர் கழிவறையில் இருந்து வெளியேறும் இயற்கை உபாதை கழிவையும் இதில் வெளியேற்றி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்