கால்வாயில் அடைப்பு

Update: 2023-09-10 11:21 GMT

கோவை ஒண்டிபுதூர் பெருமாள் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அங்கு கொசுக்கள் மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயில் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்