கோவை மாநகராட்சி 29-வது வார்டு சத்தி ரோடு கிழக்கு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் மேல் மூடி உடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால்வாய்க்குள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.