சுரங்கபாதையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-30 16:39 GMT

சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, சிவதாபுரம் செல்லும் பாதையில் யில்வே குறுகிய தரைப்பாலம் உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த சுரங்கபாதையில் 24 மணி நேரமும் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பாலத்தில் தேங்கும் சாக்கடை கழிவு நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பரமணி, ஆண்டிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்