கடும் துர்நாற்றம்

Update: 2023-08-30 10:18 GMT

கோவை பீளமேடு ஹட்கோ காலனி முல்லை நகர் 1-வது வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அதனருகில் குடிநீர் குழாயும் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்