திறந்து கிடக்கும் கால்வாய்

Update: 2023-08-27 11:26 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் கிடக்கிறது. அங்கு மேல் மூடி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால்வாய்க்குள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இது தவிர இருசக்கர வாகன ஓட்டிகளும் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வருகின்றனர். எனவே அந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்