கடும் துர்நாற்றம்

Update: 2023-08-23 10:36 GMT

கோவை கோவில்பாளையத்தில் இருந்து கருவலூர் செல்லும் சாலையில் மாணிக்கம்பாளையம் சாலை சந்திக்கும் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் காற்றில் பறந்து, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்