திறந்து கிடக்கும் கால்வாய்

Update: 2023-08-23 10:14 GMT

கோவை சிங்காநல்லூர் கோட்டைபுதூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாரும் பணிக்காக, அதன் சிமெண்டு மூடிகள் அகற்றப்பட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் கால்வாய் தூர்வாரப்படவில்லை. மேலும் சிமெண்டு மூடிகளும் பொருத்தப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்