புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-13 10:47 GMT

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் நூலகம் அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் கால்வாய் இருப்பதே தெரியாத வகையில் உள்ளது. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்