பாதாள சாக்கடை குழிக்கு மூடி வேண்டும்

Update: 2023-08-06 13:19 GMT

தஞ்சை மாநகராட்சி வியாகுல மாதா காலனி புதிய காவேரி தெருவில் பாதாள சாக்கடை குழி மூடி இன்றி காணப்படுகிறது. இதனால் குழியை கற்களை கொண்டு மூடி வைத்துள்ளனர். மூடி இல்லாததால் குழியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியை மூடி கொண்டு மூடிட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்