சுகாதார சீர்கேடு

Update: 2023-08-02 10:48 GMT

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ராமசாமி நகரில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் ஓரங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் கரணமாக அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்