கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-07-30 18:21 GMT
சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்