தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-07-23 15:35 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 42-வது வார்டில் உள்ளது ஓரிவீதி. இங்குள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரப்பி தெருவில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பொதுமக்களால் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்