தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-09 14:28 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜ் நகர் 6-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி உள்ளது. இதன்காரணமாக தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்