தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-02 15:21 GMT

தஞ்சையை அடுத்த சீனிவாசபுரம் விக்னேஸ்வரா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் ஒன்று உள்ளது. இந்த வடிகால் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக தற்போது வடிகால் முழுவதும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி வடிகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடக்க வேண்டும்.


மேலும் செய்திகள்