சுகாதார சீர்கேடு

Update: 2023-06-28 09:46 GMT

சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே கமலா குட்டை வீதி சக்தி விநாயகர் கோவில் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவற்றை மதுப்பிரியர்கள் வீசிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்