தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-21 15:17 GMT

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2-ல் சாக்கடை கால்வாயில் கழிவுநீ்ரில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் பாதாள சாக்கடை தொட்டியை ஒட்டியுள்ள காலி இடத்தில் செடி, கொடி வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உடனே கழிவுநீரில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யவும், செடி, கொடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்