மழைநீருடன் கழிவுநீர்

Update: 2023-06-21 09:29 GMT

கோவை மாநகராட்சி 20-வது வார்டு சீரநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகர் 2-வது வீதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. அங்குள்ள கால்வாயில் குப்பைகள் அதிகளவில் தேங்கியிருப்பதால், கழிவுநீர் ஓட வழியில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூட அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்