வாருகால் வசதி வேண்டும்

Update: 2022-07-23 14:05 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூர் பஞ்சாயத்து கட்டளைபட்டி கிராமம் அருந்ததியர் காலனியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி கிைடயாது. இதனால் அங்குள்ள கோவில் முன்பாக கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மக்களின் நலன்கருதி இங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்