கழிவுநீர் வெளியேற்றப்படுமா?

Update: 2022-07-23 13:33 GMT
தூத்துக்குடி வெற்றிவேல்புரம் பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி அமைந்துள்ளது. இதில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக சிறிய மோட்டார் பம்புசெட் உள்ளது. நான்கு தெரு கழிவுநீரும் இந்த கழிவுநீர் தொட்டிக்கு வந்து சேருகிறது. இங்குள்ள மின்மோட்டார் கடந்த 4 மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்