பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி

Update: 2023-06-07 17:02 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிப்பாடி கிராமம், முள்ளிச் செட்டிப்பட்டியில் சாக்கடை கால்வாய் பணி பல நாட்களாக பணி நடைபெறாமல் பாதியில் நிற்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமலும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடித்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்ணு, முள்ளிச்செட்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்