வடிகாலில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-06-04 10:58 GMT

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகாலில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சாக்கடையாக மாறி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்