விபத்து அபாயம்

Update: 2023-05-31 17:16 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையின் ஓரத்தில் பள்ளம் உள்ளது. பள்ளத்தை மறைப்பதற்காக சாலையின் ஓரத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் அதிக வாகன போக்குவரத்தால் இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையில் உள்ள பேரிகார்டை அகற்றிவிட்டு, இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-ராதா, சேலம்.

மேலும் செய்திகள்