சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-05-31 17:14 GMT

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோடாமல் அந்த பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவில் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்