தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-31 14:32 GMT

தஞ்சை ஜெபமாலைபுரம் புதுத்தெரு கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி சாக்கடையாக மாறி வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் சாக்கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்