தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-24 17:27 GMT

ஈரோடு மாநகராட்சி 3-வது வார்டில் உள்ள ஆர்.என்.புதூர் குறிஞ்சி நகர் தெற்கு பகுதியில் உள்ள ஜவுளி நகரில் சாலை வசதி மற்றும் சாக்கடை வடிகால் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டின் மையப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சிறுவர்-சிறுமிகள் கழிவு நீரில் நடந்து செல்லும் அவலம் உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ஆர்.என்.புதூர் ஜவுளி நகர் குறிஞ்சி நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி நகரில் சாலை வசதியும் சாக்கடை வசதியும் அமைத்து தர அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்