அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. அப்போது தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து உடையார்பாளையம் கடைவீதியில் இருபுறமும் வடிகால் வசதி அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.