கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-05-24 11:38 GMT


நாகை மாவட்டம் தெருப்பள்ளிதெரு, பழனியாண்டி பிள்ளை சத்திரம் அருகில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்