ரோட்டில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-05-17 15:03 GMT

ஈரோடு ரங்கம்பாளையத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. எனவே தினசரி ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சாலை தார் போடப்படாமல் குண்டும் குழியுமாக கிடக்கிறது. இந்தநிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அங்குள்ள ரோட்டில் சாக்கடையாக பாய்ந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அலுவலகம் வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்கவும், புதிய சாலை அமைக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்