ராமநாதபுரம் பாரதிநகர் குமாரய்யா கோவில் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்குகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் இதன் மூலம் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.