பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்

Update: 2023-05-03 17:17 GMT

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுமையாக முடிக்காமல் பாதியிலே நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சேகர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும் செய்திகள்