கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-05-03 14:51 GMT


திருவாரூர் நகரில் அண்ணா சாலை கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்