பள்ளிக்கூடம் முன்பு தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-03 07:49 GMT
கடையம் யூனியன் ஏ.பி.நாடானூர் பஞ்சாயத்து சடையாண்டியூர் தெற்கு தெருவில் இருந்து சங்கரன்குடியிருப்பு செல்லும் வழியில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிக்கூடம் முன்பாக வாறுகாலில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்