தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-09 07:11 GMT

கோவை இருகூர் பஞ்சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அதில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு மீண்டும் அடைப்பு ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் வீடுதோறும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்