நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-02 09:23 GMT

கோவை வெள்ளலூர் பேரூராட்சி 8-வது வார்டு காந்தி நகர் மேகரலிவீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்