சுகாதார சீர்கேடு

Update: 2023-03-26 10:56 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் சின்ன கடை தெரு உள்ளது. இங்குள்ள கடைவீதியில் உள்ள கழிப்பறை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மூக்கை முடியபடி வந்து செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிப்பறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்