தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-19 16:30 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அவினாசி சூளை பகுதியில் 448 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புக்கு மத்தியில் தெப்பக்குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி ெபாதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அங்குள்ள சிறுவர்-சிறுமிகள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லிங்கேஸ்வரன்,அவினாசி.

9842286156

மேலும் செய்திகள்